1 |
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. |
2 |
அகல உழுகிறதை விட ஆழ உழு. |
3 |
அகல் வட்டம் பகல் மழை. |
4 |
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. |
5 |
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். |
6 |
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது |
7 |
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? |
8 |
அடக்கமே பெண்ணுக்கு அழகு. |
9 |
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். |
10 |
அடாது செய்தவன் படாது படுவான் |
11 |
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் |
12 |
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம் |
13 |
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். |
14 |
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. |
15 |
அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. |
16 |
அந்தி மழை அழுதாலும் விடாது. |
17 |
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? |
18 |
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். |
19 |
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். |
20 |
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா? |
21 |
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். |
22 |
அப்பன் அருமை மாண்டால் தெரியும். |
23 |
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை |
24 |
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். |
25 |
அரசனை நம்பி புருசனை கைவிடாதே |